குழந்தை பால் குடிச்சதும் என்ன செய்யணும் தெரியுமா தாய்மார்களே??

குழந்தை பால் குடித்து முடித்ததும் ஏப்பம் விட்டால்தான் இளம் தாய்மார்கள் நிம்மதிப்பெருமூச்சு விடுவார்கள். ஏப்பம் வரவில்லை என்றால் குழந்தை போதிய அளவுக்குப் பால் குடிக்கவில்லை என்றோ அல்லது வயிற்றில் ஏதோ பிரச்னை என்று பயப்படுவார்கள்.


* குழந்தைகள் பால் குடிக்கத் தெரியாத ஆரம்ப காலங்களில் பாலுடன் சேர்த்து காற்றையும் விழுங்குவார்கள். அப்படி உடலில் அதிகப்படியாக சேரும் வாயு வாயு வெளியேறுவதுதான் ஏப்பம்.

* பால் நன்றாக குடிக்கத் தொடங்கிய பிறகு காற்றை விழுங்குவது குறைந்துவிடும். அதனால் ஏப்பம் விடுவதற்கு அவசியம் இருக்காது. ஒரு சில நேரங்களில்தான் வாயு வெளியேறாமல் வயிற்றை உப்புசமாக மாற்றிவிடும்.

 அதனால் பால் குடித்ததும் குழந்தை நிம்மதியாக தூங்கிவிட்டாலே வயிற்றில் வாயு இல்லை என்றுதான் அர்த்தம். பொதுவாக குழந்தையை பால் குடித்ததும் முதுகில் போட்டு தட்டிக் கொடுத்தாலே வாயுவானது வெளியேறிவிடும்.