தொழில் தொடங்க ஆசையா? இருக்கவே இருக்கு தாட்கோ! எப்படி தெரியுமா?

தொழில் தொடங்க ஆசைப்பட்டாலும், மூலதனம் இல்லாமல் பலரும் சம்பளத்துக்கு மட்டுமே வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மற்ற சமூகத்தினரைவிட, எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினருக்கு அரசு தாரளமாக உதவி அளிக்கிறது.


ஆம், "தாட்கோ" மூலம் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ஒரு குடும்பத்திற்கு ரூபாய்.7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது. இண்டர்நெட் மூலமாக விண்ணப்பிக்க சொல்லியிருப்பதால் பெரும்பான்மையான மக்களுக்கு இந்த செய்தி போய் சேரவில்லை எனவும் விண்ணப்பித்தலில் வழிமுறை தெரியவில்லை என்பதாலும் தகுதியுடைய பலர் விண்ணப்பிக்காமல் விட்டுவிடுகின்றனர். 

அரசு ஒதுக்கும் பணத்தை கொஞ்சம்கூட மீதிவைக்காமல் அனைவரும் விண்ணப்பித்து “கடைசிவரை முயற்சிசெய்து” பயனடையுங்கள்.
எனவே தகுதியுள்ள 55 வயதிற்கு உட்பட்ட அனைத்து எஸ்.சி., எஸ்.டி. மக்களும் விண்ணப்பித்து பலனை அடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
இதற்கு போட்டோ, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் (குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்), கல்வி சான்றிதழ் (படிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம்), கொட்டேஷன், திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்கள் இருந்தால் போதும்.

இவை அனைத்து சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி என்று ஏதுமில்லை. எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்