சொல்வதை செய்வதும், செய்வதை சொல்வதும் அ.தி.மு.க.வில் மட்டுமே நடக்கும். அந்த வகையில் பழனிக்கு பிரசாரம் செய்வதற்குச் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களிடம் ஒரு வாக்கு கொடுத்துள்ளார்.
பழனி மக்களுக்கு முதல்வர் கொடுத்த வாக்கு... என்ன தெரியுமா..?
அதன்படி, ‘சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றால் பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுக, திமுக இரு கட்சிகளும் தேர்தல் களத்தில் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை வீசி வருகின்றன. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ரவி மனோகரனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரித்து பிரரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது முதலமைச்சர் பேசியதாவது:- பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். கடவுளே இல்லை என கூறி வந்த திமுகவினர் தற்போது கையில் வேல் பிடித்து உள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தல் உடன் திமுகவின் சகாப்தம் முடிவடையும் என்று தெரிவித்தார். கடந்த 21ம் தேதி ஆரணியில் தேர்தல் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் ஆரணியை தலைமையாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.