டிக்கெட் எடுக்க மறுத்த போலீஸ்! 10 கிலோ மீட்ட வாக்குவாதம்! சுருண்டு விழுந்து பலியான கண்டக்டர்! ஓடும் பேருந்தில் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் டிக்கெட் எடுக்குமாறு போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசுப் பேருந்து நடத்துநர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.


திருச்சியிலிருந்து கடலூருக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திட்டக்குடி காவல் நிலைய காவலர் பழனிவேல் சாதாரண சீரூடையில் பயணம் செய்துள்ளார். போலீஸ் என தெரியாததால் டிக்கெட் எடுக்குமாறு நடத்துநர் கோபிநாத் கூற, நான் போலீஸ் என கூறி டிக்கெட் எடுக்க மறுப்பு தெரிவித்து உள்ளார் போலீஸ் பழனிவேல்.

போலீஸ் என்றால் அடையாள அட்டை காண்பிக்க வேண்டும் என நடத்துநர் கோபிநாத் கூறியதை பழனிவேல் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. அடையாள அட்டை காண்பித்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும் இல்லை என்றால் கீழே இறங்குங்கள் என நடத்துநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பிரச்சனை பெரிதானது.

நடத்துனர் கோபிநாத் மற்றும் போலீஸ் பழனிவேல் இருவரிடையேயான வாக்குவாதம் சண்டையாக மாறி சுமார் 10 கிலோ மீட்டர் நீடித்தது. வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நடத்துனர் கோபிநாத் திடீரென பேருந்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அந்த பேருந்திலேயே நெய்வேலியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் ஏற்கனவே இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களால் சிறைப் பிடிக்கப்பட்டு இருந்த பழனிவேலை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.