2 கத்திகளால் மனைவியை 59 முறை மாறி மாறி குத்திய கொடூர கணவன்! பதற வைக்கும் காரணம்!

மனைவியை 2 கத்திகளால் 59 முறை கொடூரமாக குத்திக் கொன்ற கணவனுக்கு நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.


பிரிட்டனைச் சேர்ந்தவர் 47 வயது லாரன்ஸ் பிராண்ட். இவர் இந்தியப் பெண்ணான 41 வயது ஏஞ்சலா மிட்டலை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கருத்த் வேறுபாடுகள் முற்றிய நிலையில் தொடர்ந்து குடும்பத்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த ஆண்டு தகராறு முற்றிய நிலையில் லாரன்ஸ் ஏஞ்சலாவை சர்மாரியாகக் கத்திகளால் குத்தியதில் ஏஞ்செலா உயிரிழந்தார். இது  தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது லாரன்ஸ் ஆத்திரத்துடன் ஒருகத்தியால் குத்தியதில் அந்தக் கத்தியே உடைந்து விட சமையலறையில் இருந்து இன்னொரு கத்தியை எடுத்து வந்து மீண்டும் மீண்டும் குத்தியது தெரியவந்தது. 

அந்த நபர் அவ்வளவும் ஆவேசத்துடன் குத்தியும் பரிதாபத்துக்குரிய அந்தப் பெண் உறுதியுடன் உயிருக்குப் போராடியது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, லாரன்ஸ் செய்ததூ மிகவும் கொடூரமான கொலை என்று தெரிவித்து ஆயுள் தண்டனை விதித்தார். மனைவி மிகவும் சந்தேகப்பட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக லாரன்ஸ் கூறியுள்ளார். பிரிட்டனில் ஆயுள் தண்டனை என்பது 16 ஆண்டுகள் 8 மாதங்கள் ஆகும்.