அ.தி.மு.க. கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்று ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கிறார் துக்ளக் பத்திரிகையை நடத்திவரும் குருமூர்த்தி.
ஊழல் அதிமுகவை அபகரிக்க துக்ளக் குருமூர்த்தி பிளான்! நாறடிக்கும் விசிக!
அ.தி.மு.க. என்ன செய்தால் ஜெயிக்க முடியும் என்று வழிகளும் காட்டியிருக்கிறார். அடுத்த கட்சியான அ.தி.மு.க. மீது திடீர் அக்கறை ஏன் என்று தோலுரித்துக் காட்டியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு.ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக துக்ளக் குருமூர்த்தி அழுகை இருக்கிறது.
இந்த வார துக்ளக்கில் அ.தி.மு.க. மீது அக்கறை கொள்வது போல சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று தலையங்கம் எழுதியிருக்கிறார். மன்னர்களுக்கு ஆலோசனை சொல்லுகிற அன்றைய பாரம்பரியத்தொழிலை இன்றைக்கும் குருமூர்த்தி மறக்காமல் செய்து வருகிறார். அதிமுகவின் தோல்விக்கு 4 முக்கிய காரணங்களை குருமூர்த்தி முன்வைக்கிறார்.
அதில் முக்கியமானவை அ.தி.மு.க.வின் ஊழல், ஒற்றுமையின்மை. இதை சரி செய்து,மீண்டும் 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வரவேண்டுமாம். இந்த உபநிடதங்களை அருளியுள்ளார் குருமூர்த்தி. நல்லவேளை ஊழலிருந்து தப்பிக்க யாகம் எதுவும் நடத்த சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் போட்டி போட்டுக்கொண்டு இந்த ‘மன்னர்கள்’ செய்தாலும் செய்வார்கள்.