பிரீபெய்டு முறையில் மது விற்பனை செய்யப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Prepaid முறையில் சரக்கு விற்பனை! ஜெகன் மோகனாரின் அடுத்த அதிரடி!

ஆந்திராவில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு ஜெகன்மோகன் ரெட்டி மிகவும் போராடி வருகிறார். இதனை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக "ப்ரீபெய்ட் மதுவிற்பனை" என்ற முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளார்.
அதன்படி 25 வயது நிரம்பியவர்களுக்கு "லிக்கர் கார்ட்" என்ற மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட அட்டை வழங்கப்படும் என்றும் அந்த அட்டையை உபயோகித்து தான் மது வாங்க வேண்டும் என்றும் இந்த முறையில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளுக்கு இந்த அட்டையை உபயோகித்து வெறும் 3 மதுபாட்டில்களை ஒருவரால் பெற இயலும்.
இந்த அட்டையை பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுடன் இணைத்து பெற்றுக்கொள்ளலாம். இந்த அட்டையை 5000 ரூபாய் வரை ரீசார்ஜ் செய்து மதுவை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.