காட்டுக்குள் நடுச் ஜாம சாத்தான் பூஜை..! உயிரோடு பலி கொடுக்கப்பட்ட கர்ப்பிணி பெண்! மேலும் 6 பேர் ரத்த பலி! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

காட்டுப்பகுதியில் இருந்து கர்ப்பிணி பெண்களை குறி வைத்து உயிர்பலி கொடுத்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய அமெரிக்க நாடான தலைநகர் பனாமா சிட்டியில் இருந்து சுமார் 155 மைல்கள் தொலைவைல் உள்ள காட்டுப்பகுதியில் மத அடிப்படைவாத கும்பல் ஒன்று சாத்தான் பூசை மேற்கொண்டு அதற்காக உயிர்பலி கொடுக்கும் செயலில் இடுப்பட்டுள்ளது. மேலும், பனாமாவின் காட்டுப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களை தங்கள் பாவங்களில் இருந்து விடுவிக்கும் நோக்கில் குறிப்பிட்ட மத குருக்கள் சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த சாத்தான் பூசையில் பங்கேற்ற கிராம மக்களை அடித்து, சிலரை உயிருடன் நெருப்பில் தள்ளி, கூரான கத்தியால் தாக்கவும் செய்துள்ளனர். இந்த சாத்தான் பூசையில் இருந்து தப்பிய 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அங்கிருந்த கோவில் ஒன்றில் இருந்து கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 7 பேரின் சடலங்களை காவல்துறையினர் மீட்டனர்.  மேலும், காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பில் 10 பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களால் சித்திரவதைக்கு உள்ளான 14 பேரை விடுவித்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட 14 பேரில் இருவர் கர்ப்பிணி பெண்கள் எனவும் பலருக்கும் ஆழமான காயங்கள் இருந்துள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கைதான 10 பேரில் ஒருவர், கொல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்வு அலைவுகளை ஏற்படுத்தியுள்ளது.