அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டுமா? கார்த்தியை விளாசும் ரசிகர்கள்!

நடிகர் கார்த்திக் மற்றும் சூர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் ஒரே குடும்பத்திலிருந்து வந்த இரு மிகப்பெரும் நடிகர்களாவர்.


சூர்யா பல வருடங்களுக்கு முன்னர் இருந்தே படங்களில் நடித்து வந்தாலும் நடிகர் கார்த்திக் கடந்த பத்து வருடங்களாக மட்டுமே நடித்து வருகிறார்.  சூர்யா தன்னுடன் நடித்த நடிகை ஜோதிகாவை கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் தனது அப்பா அம்மா பார்த்து வைத்த கண்ணை திருமணம் செய்து கொண்டார்.

 இந்நிலையில் தனது அணியான ஜோதிகாவுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளார் கார்த்திக். இந்த படத்தை திரிஷ்யம் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தில் ஜோதிகாவிற்கு கார்த்திக் தம்பியாக நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.

தற்போது ஜோதிகா நாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார் .கார்த்தி கைதி என்ற ஒரு படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. என்ன தான் இருந்தாலும் அண்ணியுடன் இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டுமா? என்று ரசிகர்கள் கார்த்தியை கேட்க ஆரம்பித்துள்ளனர்.