ஜீன்ஸ்..! சிவப்பு சர்ட்..! உடல் முழுவதும் காயம்..! தண்டவாளம் அருகே இளைஞர் சடலம்! அம்பை பரபரப்பு!

ரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவமானது திருநெல்வேலி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பை எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள கல்லிடைக்குறிச்சி என்னும் என்னும் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டிற்கு அருகேயுள்ள தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். 

இதுகுறித்த தகவல் தென்காசி ரயில்வே காவல்துறையினருக்கு கிடைத்தது. உடனடியாக அவர்கள் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் யார் இறந்தது என்று நடத்தப்பட்ட விசாரணையில்,  கல்லிடைக்குறிச்சியிலுள்ள மேல்முக நாடார் தெருவை சேர்ந்த சாம்பல் என்பவரது மகனான ராஜாசிங் (32) என்று காவல்துறையினர் உறுதி செய்தனர்.

ராஜாசிங் அடித்து கொலை செய்யப்பட்டாரா இல்லை தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து அறிய காவல்துறையினர் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவமானது அம்பை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.