பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளுடன் சென்று சந்தித்து பேசினார்
பத்திரிகையாளர்களை மிரட்டிய பா.ம.க.வுக்கு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் ஆர்ப்பாட்டம் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது அங்கிருந்த பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் பத்திரிகைகளை தாக்க முயற்சி செய்தது மிகவும் கண்டனத்துக்குரியது
இந்தச் செயலானது பத்திரிகையாளருக்கு பாதுகாப்பு இல்லாதது போல் காட்டுகிறதுபத்திரிக்கையாளர்களை மிரட்டிய கட்சி நிர்வாகிகள் மீது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்கள் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் என்று உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.