புனித யாத்திரை சென்ற பெண்ணின் குளியல் வீடியோ லீக்! காவல்துறை அதிகாரி செய்த மோசமான செயல்!

கோவில் யாத்திரைக்கு சென்ற பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கேதார்நாத் புனித ஸ்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள பனிலிங்கத்தை தரிசிப்பதற்கு பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வருவது வழக்கமானது. இந்த அமர்நாத் யாத்திரையானது 46 நாட்களுக்கு நடைபெறும் என்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வையொட்டி கேதார்நாத் வந்த வண்ணம் உள்ளனர்.

யாத்திரீகருக்கு வரும் பக்தர்களை பாதுகாப்பதற்காக பல்லாயிரக்கணக்கான அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவ்வாறு பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் யாத்திரீகத்திற்கு வந்தப்பெண் குளிக்கும் காட்சிகளை வீடியோவாக படமெடுத்தார். வீடியோ எடுக்கும்போதே அந்த பெண் காவலரை கண்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்திலிருந்து விரைந்து வந்த யாத்திரீகர்கள் காவல்துறை அதிகாரியை அடித்து கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் டிர்குடா காவல்நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். அவருடைய செல்போனை பறிமுதல் செய்த காவல் அதிகாரிகள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். இந்த சம்பவமானது கேதார்நாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.