ஆதிபராசக்தியான பார்வதி தேவியை ஒன்பது வகையான சக்திகள் சேர்ந்த மகாசக்தியாக சொல்கிறார்கள்.
நவசக்திகளின் இருப்பிடம் எந்தக் கடவுள் தெரியுமா? ஆடி வெள்ளிக் கிழமை நவசக்தி அருள் பெறுங்கள்

அந்த ஒன்பது சக்திகளுக்கு நவசக்திகள் என்ற பெயர். நவசக்திகளின் பெயர்கள் என்னென்ன என்பதில் இரண்டு வகையான கருத்துக்கள் உண்டு. சர்வபூதமணி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரௌத்திரி, கேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளே நவசக்திகள் என்பது ஒரு கருத்து. தீப்தை, சூட்சமை, ருஜை, பத்ரை, விழத்யை, விமலை, அமோகை, வித்யுதை, சர்வதோக்யை என்பன நவசக்திகளின் பெயர்கள் என்பது இன்னொரு கருத்து.
மகா சக்தியான பார்வதி தேவி எல்லா வகையான சக்தியாகவும் இருப்பவள். எனவே உமாதேவியை நவசக்திகளின் இருப்பிடமாக வழிபடுவது ஆகம நூல்களின் கருத்து. இப்படி ஒரே சமயத்தில் ஒன்பது சக்திகளையும் ஒன்பது வகையான மலர்களால் ஒன்பது அர்ச்சகர்கள் அர்ச்சிப்பார்கள். இது நவசக்தி அர்ச்சனையாகும்.
அர்ச்சனை முடிந்ததும் எல்லா நிவேதனமும் செய்து மலர்கள் 9 சேர்த்து புஷ்பாஞ்சலி செய்ததும், தோடி, கல்யாணி, காம்போதி, பைரவி, பந்துவராளி, புள்ளாகவராளி, நீலாம்பரி, வசந்தா ராகங்களைப் பாடி ஆசீர்வாதம் சொல்லி, 9 பெண்களும் அம்மனுக்கு ஒரே சமயத்தில் கற்பூர ஆரத்தி எடுக்கிறார்கள்.
மயிலாடுதுறைக்கு அருகில்
உள்ளது தருமபுரம் ஆதீனம். ஆதினத்தின் நிர்வாகத்தில் 27 தேவஸ்தானங்கள் இருக்கின்றன.
தேவஸ்தானங்களில் இருக்கும் அம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் நவசக்தி அர்ச்சனை ஆண்டுதோறும்
நடப்பது வழக்கம்.