சீமானுக்கு விஜயலட்சுமி் கர்நாடகா மிரட்டல்

கொஞ்ச நாளாக அமைதியாக இருந்த நடிகை விஜயலட்சுமி மீண்டும் வீடியோ வடிவத்தில் வந்துவிட்டார். செத்துவிடுவேன் என்றெல்லாம் பரிதாபமாகப் பேசிய விஜயலட்சுமி இப்போது, கர்நாடக போலீஸில் மாட்டிவிடுவேன் என்று மிரட்டத் தொடங்கியிருக்கிறார்.



கொஞ்ச நாளாக அமைதியாக இருந்த நடிகை விஜயலட்சுமி மீண்டும் வீடியோ வடிவத்தில் வந்துவிட்டார். செத்துவிடுவேன் என்றெல்லாம் பரிதாபமாகப் பேசிய விஜயலட்சுமி இப்போது, கர்நாடக போலீஸில் மாட்டிவிடுவேன் என்று மிரட்டத் தொடங்கியிருக்கிறார்.
நடிகை சீமான் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த விஜயலட்சுமி, திடீரென அந்த வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டு கர்நாடகா போய்விட்டார். சமீபத்தில் ஒரு பேட்டியில், என் மீது ஒரு நடிகை இத்தனை ஆண்டுகளாக குற்றம் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார், என்னை என்ன செய்யமுடியும் என்ற வகையில் பேசியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுப்பது போல் பொங்கித் தீர்த்திருக்கிறார் விஜயலட்சுமி.
அவரது பேட்டியில், ‘சவுக்கு சங்கர் விவகாரம் குறித்து மீடியாக்கள் கேட்டபோது ரொம்பவே கொஞ்சுகிறான். அவனுக்கு பொண்டாட்டி இருக்காங்க, பிள்ளைங்க இருக்காங்க, மாமியார் இருக்காங்கன்னு சொல்றான். பிறகு எதுக்குடா போன வருசம் என்கிட்டே பொண்டாட்டி பொண்டாட்டின்னு பம்மிக்கிட்டு வந்தே.
தி.மு.க.வினரிடம் என் மானம் போகிறது என்று கெஞ்சி மாதம் 50 ஆயிரம் போட்டவன் தானே நீ… இனியும் உன்னை நான் சும்மா விடப்போவதில்லை. உன்னையும் உனக்கு ஆதரவாக இருக்கும் மதுரை செல்வம் மீதும் கர்நாடகாவில் புகார் கொடுக்கப் போகிறேன். எங்களுக்கு யாரும் இல்லையா, அனாதையா நான், என்னை ரோட்டில் பெற்றுப்போட்டு போய்விட்டார்களா..?
நான் விடவே மாட்டேன். இனிமே உங்களுக்கு கர்நாடகாவில் தான் பஞ்சாயத்து இருக்கிறது. என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரையில் போராடிக்கொண்டே தான் இருப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.
உடன்பிறப்புகள் இந்த வீடிவோவை வேகவேகமாக பரப்பிவருகிறார்கள்.