வியர்வை நாற்றம் தாங்கமுடியலையா… துளசி இருந்தால் போதுமே !!

துளசி செடியின் தாயகம் இந்தியாவாக கருதப்படுகிறது. அந்தமான், நிக்கோபர், இலங்கையில் அதிகம் காணப்படுகிறது. கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி என ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன.


துளசியின் இலை, தண்டு, பூ, வேர் என அத்தனை பாகங்களும் மருத்துவப் பயன் நிரம்பியவை. துளசி செடி ஒரு கிருமிநாசினி என்பதால் வீட்டு வாசலில் வளர்ப்பது நம் தமிழர் பண்பாடு. ஆன்மிக மகத்துவம் போலவே துளசியில் மருத்துவத் தன்மைகளும் நிரம்பியுள்ளன.

• தினம் சில துளசி இலைகளை வெறும் வயிற்றில் தின்றுவந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான தொந்தரவுகளைத் தடுக்கும்.

• துளசி சாறு கிருமிநாசினியாக செயல்பட்டு உடலுக்குத் தெம்பும் புத்துணர்ச்சியும் தரக்கூடியது.

• குளிக்கும் நீரில் துளசி இலைகளை ஒருநாள் முன்னரே ஊறவைத்து குளித்தால், வியர்வை நாற்றம் அகன்றுவிடும்.

• துளசி இலையை எலுமிச்சை சாறுவிட்டு அரைத்து தோலில் தடவினால் படை, சொறி போன்ற தோல் நோய்கள் நீங்கும்.

உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றக்கூடிய குணமும், தொண்டைப்புண், வாய்ப்புண்  போன்றவற்றை அகற்றக்கூடிய ஆற்றலும் துளசிக்கு உண்டு.