கடவுளை எளிதில் கண்டுபிடிக்க சுவாமி விவேகானந்தர் காட்டிய வழி இதுதாங்க!

சுவாமி விவேகானந்தர் சிறிய வயதில் மனதில் ஏராளமான கேள்விகளுடன் அலைந்தவர்.


அத்தனை கேள்விகளுக்கும் பதிலாக சுவாமி ராமகிருஷ்ணர் அமைந்தார். அதனாலே தன்னிடம் கேள்வி கேட்கும் அத்தனை பேருக்கும் மிகவும் எளிமையாக ஆன்மிக பதில் சொல்வார் விவேகானந்தர். இதோ அவரது பதில்களைப் பாருங்கள். 

நம்மைப் படைத்த ஆண்டவனுக்கு நாம் என்ன உதவி செய்ய வேண்டும்ஆண்டவனுக்கு உதவுவதாக எப்போதும் சொல்லாதீர்கள். நீங்கள் அவருக்காகப் பணியாற்றும் பேறு பெற்ற பாக்கியசாலிகள் மட்டுமே.

ஆகவே ஆண்டவனுக்கு உதவி எனும் சொல்லை உங்களது உள்ளத்திலிருந்தே நீக்கி விடுங்கள். நீங்களாக விரும்பி உதவி செய்ய முடியாது. அவரது விருப்பத்தினால்தான் நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். உங்களால் அவரை வழிபடத்தான் முடியும்.

கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார் என்றால் நாய் போன்ற மிருகங்களிலும் இருக்கிறாராநீங்கள் ஒரு நாய்க்கு ஒரு பிடி சோறு கொடுக்கும் போது, அந்த நாயை கடவுளாகவே பாவித்து வழிபடுங்கள்.

ஏனென்றால் அந்த நாயினுள்ளும் கடவுள் இருக்கிறார். அவரே எல்லாமுமாய் இருக்கிறார். எல்லாவற்றிலும் இருக்கிறார்