மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் மோடி பேசிய ராமர் கோயில் இடிப்பு விவகாரம் படு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பா.ஜ.க. கூட்டணிக்கு 400 சீட்டுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலின் ஆரம்பத்தில் இருந்தே ராமர் கோயிலை வைத்து இந்துக்களை கவர்வது மட்டுமே நரேந்திர மோடியின் பிரசார நோக்கமாக இருக்கிறது. இப்போது உச்சபட்சமாக, ‘இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை இடித்துவிட்டு அங்கு மீண்டும் பாபரி மசூதி வந்துவிடும்’ எனும் ரீதியில் பேசியிருக்கிறார்.
இஸ்லாமியர்கள் விரட்டியடிப்பு, ராமர் கோயில் இடிப்பு, படுவேகத்தில் மோடி

உத்திரப்பிரதேசத்தில் நாடாளுமன்றத்துக்கான மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் இஸ்லாமியர்களை ஓட்டுப் போடவிடாமல் பா.ஜ.க.வினர் விரட்டியடிப்பதாக சில செய்திகள் உலாவருகின்றன. ஆனால், இதனை ஆளும் தரப்பு கடுமையாக மறுக்கிறது.
அதேநேரம் மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் மோடி பேசிய ராமர் கோயில் இடிப்பு விவகாரம் படு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பா.ஜ.க. கூட்டணிக்கு 400 சீட்டுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலின் ஆரம்பத்தில் இருந்தே ராமர் கோயிலை வைத்து இந்துக்களை கவர்வது மட்டுமே நரேந்திர மோடியின் பிரசார நோக்கமாக இருக்கிறது. இப்போது உச்சபட்சமாக, ‘இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை இடித்துவிட்டு அங்கு மீண்டும் பாபரி மசூதி வந்துவிடும்’ எனும் ரீதியில் பேசியிருக்கிறார்.
இந்த விவகாரத்துக்கு காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பு தெவித்து வருகிறது. அதேநேரம், ‘அயோத்தி தீர்ப்பை மறுபரிசீலனை செய்வோம் என்று ராகுல் பேசியதையே மோடி குறிப்பிட்டுள்ளார்’ என்று பா.ஜ.க.வினர் இந்த பேச்சை வரவேற்கிறார்கள்.
இந்த சர்ச்சை பேச்சு குறித்து காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கபில்சிபில், ‘பாபர் மசூதி – ராமர் கோயில் குறித்து மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை பிரதமர் மோடி பதிவு செய்திருக்கிறார். இதுவும் தேர்தல் நடைமுறை விதிகளுக்கு முரணானது. நீங்கள் நாட்டின் பிரதம மந்திரியாக இருக்கிறீர்கள், ஒரு சாமியார் அல்ல என்பதை உணர வேண்டும்’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அதுசரி, இதற்காக தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துவிடுமா என்ன..?