நள்ளளிரவில் வீட்டுக்குள் நுழைந்த திருடன்! உள்ளே ஒன்றும் இல்லாததால் செய்த செயல்! திருப்பூர் அட்ராசிட்டி!

திருடச்சென்ற வீட்டில் எதுவும் இல்லாததால் ஆத்திரமடைந்த தெரியும் டிவியை உடைத்த சம்பவமானது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூரில் போயம்பாளையம் எனுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட வடிவேல் நகர்    என்னுமிடத்தில் கதிர்வேல் என்பவர் வசித்துவருகிறார். இவர் வெளியூருக்கு சென்ற நேரத்தில் திருடன் ஒருவன் இவருடைய வீட்டுக்குள் நுழைந்துளாளான். பீரோவில் சேமித்து வைத்திருந்த 5 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடி சென்றுள்ளார். அதன்பிறகு இவருடைய வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டிலும் திருடுவதற்கு முயன்றுள்ளார்.

அப்படியே அந்த வீட்டிற்குள் நுழைந்து தேடி பார்த்துள்ளார். ஆனால் அந்த வீட்டில் எந்தவித நகையும் பணமும் இல்லை என்பதை கண்டுபிடித்த திருடன் ஆத்திரம் அடைந்துள்ளான். அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் உள்ள தொலைக்காட்சியை தூக்கிவந்து பிரதான சாலையில் உடைத்துள்ளார். அதன் பின்னர் அவர் அந்த இடத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

வீட்டின் சொந்தக்காரர் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தனர். ஆனால் திருடன் முகமூடி அணிந்து இருந்தததால் காவல்துறையினரால் இதுவரை அடையாளத்தை கண்டுபிடிக்க இயலவில்லை. திருடன் பிற வீடுகளின் கதவுகளை மூடிவிட்டு குறிப்பிட்ட வீட்டில் திருடுவதை மேற்கொண்டுள்ளார்.

இந்த சம்பவமானது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.