இளம் வயதில் மரணிக்கும் அபாயம்! ஆபத்தில் இந்திய பெண்கள்! காரணம் இந்த நோய் தான்!

உயிரிழக்கும் அபாயம் இந்திய பெண்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளதாக, அதிர்ச்சி தகவல் ஒன்று கூறுகிறது.


நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் இந்தியர்களை மிரட்டும் புதிய நோயாக உருவெடுத்துள்ளது. நாளுக்கு நாள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2030ம் ஆண்டின்போது, இந்தியாவில் மட்டும் 10 கோடி பேர் வரை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட நேரிடலாம் என,  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில், மேற்கத்திய லைஃப்ஸ்டைல் நுகர்வு காரணமாக, ஆசிய நாடுகளில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைவிடவும் அதிகமாகும். குறிப்பாக, இந்தியாவில், நீரிழிவு நோய் பாதிப்பு மிக வேகமாக உள்ளது.

இந்திய பெண்களுக்கு, நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. அத்துடன், அவர்களில் பலர் நீரிழிவு நோயால் உயிரிழக்கவும் கூடும். அந்தளவுக்கு, இந்திய நடுத்தர வயது பெண்களிடையே உடல்நல அக்கறை குறைந்து காணப்படுவதாகவும், உலக சுகாதார அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.