தல 59 படத்தின் கதை இது தான்! முரட்டு வழக்கறிஞராக மிரட்டப்போகும் அஜித்!

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இயக்குனர் வினோத் இயக்க உள்ள தல 59 படத்தின் கதை என்ன என்பது யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஏனென்றால் இந்தியில் வெளியான பிங்க் படத்தின் கதையை தழுவித்தான் தல 59 உருவாகிறது.


தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இயக்குனர் வினோத் இயக்க உள்ள தல 59 படத்தின் கதை என்ன என்பது யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஏனென்றால் இந்தியில் வெளியான பிங்க் படத்தின் கதையை தழுவித்தான் தல 59 உருவாகிறது.

   இந்தியில் அமிதாப்பச்சன், டாப்சி நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிங்க். இந்த படத்தின் தமிழ் உரிமையை வாங்கியுள்ள நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அஜித்தை வைத்து பூஜை போட்டுள்ள படம் தான் தல 59. இயக்குனர் வினோத் விரைவில் படத்திற்கான பெயரை அறிவிக்க உள்ளார். தல 59 இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

   இனி படத்தின் கதையை பார்ப்போம். மூன்று இளம் பெண்கள் – மூன்று இளைஞர்களுக்கு இடையிலான நட்பு மற்றும் அதனை தொடர்ந்து ஏற்படும் மோதல் தான் படத்தின் மையக்கரு. அரசியல் பலம் வாய்ந்த நபர் ஒருவரின் மருமகன் மற்றும் அவனது இரண்டு நண்பர்கள். மறுபுறம் பெற்றோர் உதவி இல்லாமல் சுயமாக வாழ வேண்டும் என்று நினைக்கும் இளம் பெண்.

   தன்னை விட வயதில் மிக அதிக மூத்தவருடன் உறவு வைத்திருக்கும் இன்னொரு பெண். வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த பெண். இப்படி மூன்று இளைஞர்களும் – மூன்று பெண்களும் தான் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரம். சந்தர்ப்ப சூழலில் மூன்று பெண்களுக்கும் – அரசியல்வாதி மருமகன் மற்றும் அவனது நண்பர்களுடன் பழக வாய்ப்பு கிடைக்கும். இதனை பயன்படுத்தி ஓட்டல் ஒன்று சென்று இளைஞர்களும் இளம் பெண்களும் மது அருந்துவர்.

   போதையில் அரசியல்வாதியின் மருமகன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயல்வார். ஆனால் அந்த பெண் அவனை அடித்து தள்ளவிட்டு தப்பிவிடுவார். பெண் அடித்ததில் காயம் அடைந்த அரசியல்வாதியின் மருமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பான். இந்த நிலையில் அவனது இரண்டு நண்பர்களும் அந்த பெண்களிடம் கெஞ்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்வான்.

   ஆனால் ஒரு பெண் மட்டும் துணிச்சலாக அரசியல்வாதியின் மருமகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்பார். மறுநாளே அவர் கடத்தப்படுவார். அப்போது அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்துவிட்டு மீண்டும் கடத்திய இடத்திலேயே விட்டுச் சென்றுவிடுவார்கள். இந்த சம்வங்கள் அனைத்தையுமே மூத்த வழக்கறிஞர் ஒருவர் கண்காணித்துக் கொண்டிருப்பார். காரணம் அந்த மூன்று பெண்களின் வீட்டிற்கு அருகில் தான் அந்த வழக்கறிஞர் இருப்பார்.

   கடத்தப்பட்ட மீண்ட நிலையில் இருக்கும் அந்த பெண்ணை விபச்சார வழக்கில் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுவிடுவார்கள். இதன் பிறகு தான் இந்த விவகாரத்தில் அந்த மூத்த வழக்கறிஞரின் தலையீடு ஆரம்பிக்கும். விபச்சார வழக்கில் கைதான பெண்ணை தனது வாதத்திறமையில் வழக்கறிஞர் எப்படி வெளியே கொண்டு வருகிறார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

   மெட்ரோ நகரங்களில் இளம் பெண்களின் வாழ்க்கை முறை மாறியதையும், அதனை இளைஞர்கள் தவறாக புரிந்து கொள்வதையும் சித்தரித்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும். இந்த படத்தில் விபச்சார வழக்கில் கைதாகும் பெண்ணாக டாப்சி நடித்திருப்பார். அவரை காப்பாற்றும் திறமையான வழக்கறிஞராக அமிதாப் பச்சன் நடித்திருப்பார்.

   அந்த வகையில் வழக்கறிஞராக அஜித் நடிக்க உள்ளார். டாப்சி வேடத்தில் மீண்டும் டாப்சியே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இளைஞர்களில் ஒருவராக சிம்புவை வைத்து அன்பாவன் அசராதவன் அடங்காதவன் படத்தை எடுத்து வாழ்க்கையை தொலைத்த இயக்குனர் ஆத்விக் நடிக்க உள்ளார். 


   இதுநாள் வரை அடி தடி உதவியது போல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்கிற ரீதியில் அஜித் படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால் தற்போது புத்திக் கூர்மையுடன் சமூக கருத்தை மையமாக வைத்து ஒரு படத்தை தேர்வு செய்து அஜித் நடிக்க உள்ளார். டூயட், சண்டை போன்ற அம்சங்கள் இல்லாத நிலையில் வெறும் வசனம் மட்டுமே பேசி அஜித் இந்த படத்தில் ஸ்கோர் செய்ய வேண்டும். மேலும் அமிதாப் பச்சன் வேடத்தில் நடிக்க உள்ளதால் அஜித் நடிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.