உடல் பருமனால் அவஸ்தையா… பிரண்டை இருக்க கவலை எதற்கு?

கிராமப் புறங்களில் இன்றும் உணவுப் பொருளாக பயன்படுகிறது பிரண்டை கொடி. இது காரத்தன்மை, எரிப்புக் குணம் மற்றும் மருத்துவகுணம் நிரம்பிய மூலிகையாகும்.


·         பிரண்டைத்தண்டின் தோலை சீவி, சதைப் பகுதியை துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் தீரும். பசியின்மை பிரச்னை தீர்ந்து நல்ல பசி ஏற்படும்.

·         பிரண்டையை வெண்ணெய்யில் குழைத்து தினம் இரண்டு வேளை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம், உதடு வெடிப்பு போன்ற குறைபாடுகள் குறையும்.

·         உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் அவ்வப்போது பிரண்டையை சமைத்து சாப்பிட்டு வந்தால் ஊளை சதை குறையும்