நாளை டாஸ்மாக் திறப்பு..! சரக்கு வாங்க ஆதார் அட்டை அவசியம்..! சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு! ஏன் தெரியுமா?

மதுபானம் வாங்க வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், தங்களது அடையாள அட்டையை (ஆதார்/வாக்காளர் அடையாள அட்டை / ஸ்மார்ட் கார்டு) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை கட்டாயம் அனைவரும் கொண்டு வரவேண்டும் என மாவட்ட கண்காணிப்பாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 49 டாஸ்மாக் கடைகளில் 16 கடைகள் மட்டுமே தான் திறக்கப்படும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 49 டாஸ்மாக் கடைகளில் 16 கடைகள் மட்டுமே தான் மே 7-ஆம் தேதி திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் அந்த வகையில் காஞ்சிபுரம் 10 வாலாஜாபாத் 3 உத்திரமேரூர் 3 கடைகள் மட்டுமே திறக்கப்படும் குன்றத்தூர் வட்டத்திலுள்ள அனைத்து கடைகளும் சென்னை காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட காரணத்தினால் அனைத்து கடைகளும் திறக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

கொரோனா தொற்று அதிகமாக உள்ளதாலும், சென்னைக்கு மிக அருகில் உள்ளதாலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், அதிகப்படியாக போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் சமூக விலகள் (Social Distancing) கடைபிடித்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் மாவட்ட மக்களின் நலன் கருதியும் குன்றத்தூா் மற்றும் திருப்பெரும்புதூா் ஆகிய வட்டங்களில் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் திறக்கப்படாது.

மதுபானம் வாங்க வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், தங்களது அடையாள அட்டையை (ஆதார்/வாக்காளர் அடையாள அட்டை / ஸ்மார்ட் கார்டு) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை மதுபான கடையில் காண்பித்தும், சமூகவிலகலை கடைப்பிடித்தும் மனுபானம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 50 நபா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, மதுபானம் விநியோகம் செய்யப்பட்ட பின்னர் வரிசையாக அடுத்தடுத்து 50 நபா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மதுபானம் வழங்கவும், ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அதேபோன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ள பகுதிகளை தவிற பிற பகுதிகளிலிருந்து குறிப்பாக சென்னை பகுதிகளில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் திறக்கப்படவுள்ள மதுபான கடைளுக்கு வரும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார்