கோவையில் கள்ளக் காதலியின் 2 மகள்களுக்கும் செக்ஸ் டாரச்சர்! கொடூர நபருக்கு நேர்ந்த கதி!

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த இரண்டாவது தந்தை. கோவையில் நடந்த கொடூரம்.


தாயின் கள்ளக்காதலனால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான சிறுமிகள் குழந்தைகள் நல அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்

 

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவன் முத்துராஜ். இவன் கருணாநிதி நகர் சாய்பாபா கோவில் தெருவைச் சேர்ந்த கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுப்பதாக கூறியுள்ளான்.

 

அந்தப் பெண்ணும் முத்துராஜை நம்பி தன்னையும் தனது இரண்டு குழந்தைகளையும் அவனிடம் ஒப்படைத்து விட்டாள். ஆனால் முத்துராஜூக்கு அந்த இரண்டு பெண் குழந்தைகள் மீது தந்தை பாசம் எதுவும் கிடையாது.

 

தந்தை போல அவன் நடித்து பெண் குழந்தைகளை மட்டுமல்லாது அந்தப் பெண்ணையும் ஏமாற்றி வந்துள்ளான். ஒருமுறை அந்தப் பெண் வீட்டில் இல்லாத சமயத்தில் மகள் போன்று பாவிக்க வேண்டிய சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளான் முத்துராஜ்.

 

தனது தாயிடம் அந்தச் சிறுமி கூறவே தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அந்த பெண் வேறொரு வீட்டுக்கு குடிபெயர்ந்தார். ஆனால் அங்கேயும் விடாமல் துரத்திய முத்துராஜ் ஒரு வழியாக அந்தப் பெண்ணின் நம்பிக்கையைப் பெற்று மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தான்.

 

அவனது பாலியல் அத்துமீறல் தொடரவே என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுமி தனது பள்ளிக் கூடத்தில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு சம்பந்தமான கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளின் 1098 என்ற தொலைபேசி எண்ணை அறிந்து கொண்டாள்.

 

முத்துராஜின் அத்துமீறல் தொடரவே அந்த வீட்டில் இருக்க விரும்பாத சிறுமி தனது தங்கையை அழைத்துக்கொண்டு உக்கடம் பேருந்து நிலையத்திற்கு சென்றார்அங்கிருந்து குழந்தைகள் நல அதிகாரியை தொடர்பு கொண்ட அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை அதிகாரிகளிடம் விவரித்தார்.

 

இதையடுத்து சிறுமியை மீட்ட அதிகாரிகள் குழந்தைகள் நல ஆணைய காப்பகத்தில் ஒப்படைத்தனர். தந்தை போல பாவிக்க வேண்டிய தருணத்தில் காமக் கொடூரனாக நடந்துகொண்ட முத்துராஜை துடியலூர் காவல் துறை உதவியுடன் அவர்கள் கைது செய்தனர்.

 

போஸ்கோ சட்டத்தின்கீழ் அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முத்துராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்