அதிர்ஷ்டம் உங்கள் வீட்டைத் தட்ட வேண்டுமா? இது மட்டும் உங்கள் வீட்டில் இருந்தால் போதும்!

குள்ள நரி கொம்பு "ஷீயார் சிங்கி" என அழைக்கப்படும்


இது வீட்டில் இருக்க சொத்துக்கள் சேரும், மற்றும் பண விரயங்கள் நிற்கும். இயற்கையாக இறந்த குள்ள நரியின் சிறு கொம்பே இது. எல்லா குள்ள நரிக்கும் இருக்காது. ஆகவே உண்மையாக கிடைப்பது மிக கடினம். ஆனால் பலர் உபயோகித்து வெற்றி கண்டது.

இது குறிப்பாக வட நாட்டு தலைவர்கள் மற்றும் பெரும் தொழில் அதிபர்கள் அனைவர் வீட்டிலும் இது கட்டாயம் இருக்கும்-சில ஆண்டுகள் முன்பு வரை. ஆனால் இப்போது வியாபார நோக்கத்தில் இதற்காக பல குள்ள நரிகள் கொல்லப்படுவதாலும், அரசாங்க கெடுபிடிகளினாலும் மற்றும் இதை எடுக்கத்தெரிந்தோர் மிக அபூர்வமாகிவிட்டதாலும் நிறைய போலிகள் உலவத்தொடங்கி விட்டதாக தகவல்.

இதை எடுத்து நம் வீட்டு பணப்பெட்டியில் அல்லது பணம் வைக்கும் இடத்தில் சிகப்பு துணியால் முடிந்து வைத்து விட வேண்டும். இதற்கு சாமானியர்கள் செய்யும் படியான வேறு எந்த பூஜை முறையும் இல்லை. சொத்துக்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், புதிய சொத்து சேர்க்க ஆசைப்படுபவர்களுக்கு இது பெரிய வரப்பிரசாதம். மேலும் இதை தலைமுறை தலைமுறையாக பத்திரப்படுத்தி நம் சந்ததி வளர உபயோகிக்கலாம். உண்மையானது கிடைக்கப்பெற்றோர், கண்டிப்பாக அதிர்ஷ்டசாலிகள் ஆவர்.