சன் டிவி அழகு சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை! அதிர்ச்சியில் டீம்! காரணம் இது தான்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அழகு சீரியல் இலிருந்து சஹானா ஷெட்டி வெளியேறி உள்ளார்.


சன் தொலைக்காட்சியில் தினம் தோறும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அழகு சீரியலில் தலைவாசல் விஜய் மற்றும் ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர் . இவர்களுக்கு மகளாக நடித்திருப்பார் நடிகை சஹானா ஷெட்டிி. தற்போது இவர் திடீரென்று சீரியலை விட்டு வெளியேறி உள்ளார். இதனால் அழகு மெகா தொடர் குடும்பம் பெரும் அதிர்ச்சியில் உள்ளது .

காவியா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சஹானா சீரியல் ஆரம்பித்த முதலே நடித்து வருபவர் ஆவார். தற்போது இவருடைய வெளியேற்றத்திற்கு காரணம் கூறாமல் இருப்பதுதான் அதிர்ச்சியளிப்பதாக சீரியலை சேர்ந்த உறுப்பினர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் சஹானா செட்டி தன்னுடைய வெளியேற்றுவதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார். எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தினாலும் நான் அழகு தொடரிலிருந்து வெளியேறவில்லை. சின்னத்திரையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இதனை விட்டு வெளியேறினேன். எனக்கும் இந்த சீரியலுக்கும் மிகப்பெரிய உறவு உள்ளது. தற்போது அழகு சீரியல் ஐ டிவியில் பார்க்கும் போது எனக்கு மீண்டும் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது . நிச்சயம் நான் ஒருநாள் சென்று அவர்களோடு இணைந்து வருவேன் என்று கூறினார் சஹானா செட்டி.

அழகு மெகா தொடரில் கிடைத்ததை விட மிகச் சிறந்த வாய்ப்புகளுக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன் எனவும் கூறினார். நடிகை சஹானா சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்னும் சீரியலில் நிஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

அழகு மெகா தொடர் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆனது தற்போது 550 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.