சசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..! எடப்பாடி டபுள் ஜாக்பாட்

அ.தி.மு.க.வை மீட்டே தீருவோம் என்று சபதம் எடுத்திருந்த சசிகலா, திடீரென அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டார். இதனால் அந்த பக்கம் போகவிருந்த முக்குலத்தோர் வாக்குகள் அப்படியே எடப்பாடியாருக்கு மாறுகிறது.


இந்த நிலையில் இன்று சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழகப் பொதுச் செயலாளருமான திவாகரன் வெளியிட்டுள்ள ஒரு கருத்து எடப்பாடியாருக்கு மேலும் வலு சேர்க்கிறது.

இதுதான் அவரது அறிக்கை. சசிகலா ஒரு வீராங்கனை. சரியான நேரத்தில் போர்க்களத்திலிருந்து பின்வாங்கியதைப் போல் இந்த முடிவை அறிவித்துள்ளார். இதற்கு காரணம் அவரை துரோகிகள் முதுகில் குத்த உள்ளதை அறிந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

சசிகலாவின் முடிவை முழு மனதாக வரவேற்கிறேன். துரோகிகள் வெளியில் இல்லை. எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள். அவரைச் சுற்றியுள்ள டிடிவி தினகரன் உள்ளிட்டோரால்தான் சசிகலா இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் அரசியலுக்கு வருவதை விட அவருடைய உடல் நலனே முக்கியம்.

டிடிவிதினகரன் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டதும், அமமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக வரவேண்டும் என்று தினகரன் தெரிவித்ததும் சிறுபிள்ளைத் தனமானது. சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து முயற்சிகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, தினகரன் பேசியது இணைப்பு முயற்சியில் ஈடுபட்ட அதிமுகவினரின் கோபத்தை அதிகரித்திருக்கும்.

இது கூட சசிகலாவின் அறிவிப்பிற்கு காரணமாக இருக்கலாம். சசிகலா அவர்களின் விருப்பப்படி அதிமுக வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். இதுவே எனது விருப்பமும்” என்று கூறியிருக்கிறார். ஒரே நேரத்தில் சசிகலா, தினகரன் ஆகியோரை தள்ளி வைத்து, டபுள் ஜாக்பாக் அடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.