சேலத்தில், ச.ம.க., மகளிரணி சார்பில், மகளிர் தின விழா, நேற்று கொண்டாடப்பட்டது. கட்சி தலைவர், சரத்குமார், கேக் வெட்டி, மகளிருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
செலவு செய்ய காசு இல்லயாம்! 50 ஆயிரம் ஓட்டு இவருக்கு ஒதுக்கணுமாம்! நேற்றைய சரத்குமார் 'காமெடி!'

பின், அவர் அளித்த பேட்டி:ஓட்டு வங்கி அரசியலை நோக்கி, பா.ஜ., பயணிப்பதால், அ.தி.மு.க., வுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துஉள்ளது. தேர்தலில், வெற்றி, தோல்விகளைச் சந்திக்கும் தைரியம் வேண்டும். தமிழகத்தில், பெரியக் கட்சிகளே, தேர்தலைச் சந்திக்கப் பயப்படுகின்றன.
அ.தி.மு.க.,வை, கடுமையாக விமர்சித்துவிட்டு, அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு, லோக்சபா தேர்தலில், மக்கள் பாடம் புகட்ட வேண்டும். தனித்து போட்டியிடும் தினகரன் முடிவு வரவேற்கத்தக்கது.ஏற்கனவே, இரு இயக்கங்களுக்கும் கடுமையாக உழைத்து விட்டேன். இனி, கட்சிக்காக, தமிழக மக்களுக்காக, தனித்துப் போட்டியிடுகிறேன்.
கட்சியினர், தொகுதிக்கு, 30 - 40 கோடி ரூபாய் ஒதுக்கி செலவு செய்வதால், போட்டி சமமாக இருக்க, பணம் இல்லாத வேட்பாளர்களுக்கு, தேர்தல் கமிஷன், முன்னதாகவே, 50 ஆயிரம் ஓட்டுகளை ஒதுக்க வேண்டும்.மக்கள் பிரச்னை, சமுதாய மாற்றம் குறித்து, எங்கள் பிரசார வியூகம் அமையும். கட்சியினரிடம், விருப்ப மனு பெறுவதால், என் மனைவி, ராதிகா போட்டி குறித்து, பின்னர் முடிவெடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.