நீர் மேலாண்மையில் தமிழகத்துக்கு நம்பர் ஒன் விருது..! விவசாயி எடப்பாடியாரின் நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம்.

விவசாயியாக இருப்பதால், நீர் மேலாண்மை விவகாரங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்நோக்கு சிந்தனையோடு செயலாற்றிவருகிறார். அதற்கு மத்திய அரசின் அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது.


ஆம், நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் சிறந்த மாநிலத்திற்கான விருதினை தமிழக அரசு பெற்றுள்ளது. தமிழகத்தை அடுத்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளது.

தென் இந்தியாவில் ஆறுகளை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்ததில் சிறந்த மாவட்டமாக வேலூர், கரூர் மாவட்டங்கள் தேர்வாகியுள்ளன. அதேபோல் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட உள்ளாட்சி அமைப்புகளில் மதுரை மாநகராட்சி தேர்வாகியுள்ளது. நீர்நிலைகளை பாதுகாப்பதில் சிறந்த மாவட்டமாக பெரம்பலூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட தென்னிந்திய சமூக செயற்பாட்டாளர்களாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் முதல் பரிசையும், அண்ணா பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் சக்திநாதன் கணபதி பாண்டியன் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.