வைகுண்ட ஏகாதசி உபவாசம்! அடேங்கப்பா இத்தனை மருத்துவ நன்மைகள் தருகிறதா?

சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றி வர ஏறக்குறைய 29.1/2 நாட்கள் ஆகின்றன.


ஒவ்வொரு நாளும் ஒரு திதி எனப்படும். ஒரு மாதத்தில் முப்பது திதிகள் உள்ளன. அமாவாசையில் இருந்து பௌர்ணமி வரையில் உள்ள பதினைந்து திதிகள் சுக்ல பட்சம் எனப்படும். பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை உள்ள பதினைந்து திதிகள் கிருஷ்ணபட்சம் எனப்படும்.

அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி வீதம் சந்திரன் சூரியனிலிருந்து பிரிந்து செல்கிறது.. நான்காவது நாள் அதாவது சதுர்த்தியன்று சந்திரன் சூரியனிலிருந்து 37 டிகிரி முதல் 48 டிகிரி வரை பின்னால் உள்ளது.

11வது நாள் ஏகாதசி அன்று சூரியனில் இருந்து 134 டிகிரி பின்னால் இருக்கிறது. பௌர்ணமியன்று சந்திரன் சூரியனில் இருந்து 180 டிகிரியில் இருக்கிறது. மேற்கூறிய நாட்களில் சூரியனிலிருந்து சந்திரன் தொலைவில் விலகிச் செல்வதால் புவியீர்ப்பு சக்தி அதிகமாகிறது. அச்சமயத்தில் எப்பொழுதும் போல உணவு அருந்தினால் அது சரியாக செரிக்காது. ஆகையால் நமது முன்னோர்கள் அந்நாட்களில் விரதம் இருக்கச் சொல்கிறார்கள்.

வைகுண்ட ஏகாதசியன்று சந்திரன் சூரியனுக்கு 135 டிகிரி பின்னால் உள்ளது. அன்று சூரியன் நடுவரைக்கு தெற்கே மிக அதிகமான தூரத்திலிருக்கிறான். அன்று புவியீர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் உபவாசம் இருக்கிறோம். ஏகாதசி அன்று விரதமிருந்தால் முதல் பத்து நாட்கள் உணவு உட்கொண்டு அதனால் உள்ளே சேர்ந்துள்ள உள்ள கழிவுப் பொருட்கள் கரைந்து வெளியேறுகின்றன. 11 ஆவது நாளான ஏகாதசி அன்று வயிறு சுத்தமாகிறது.

அன்று ஜீரணக் கருவிகளுக்கும் ஓய்வு கிடைக்கிறது. பின் நமக்கு வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. முக்கியமாக வைட்டமின் ஏ யும் சி யும் தேவைப்படும். ஆகவேதான் துவாதசியன்று வைட்டமின் ஏ சத்து நிறைந்த அகத்திக்கீரையையும், வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லிக்காயையும் உணவுடன் சேர்த்துக் கொள்கிறோம்.

ஒவ்வொரு நாளும் நாம் செய்ய வேண்டிய சூரிய நமஸ்காரமும் ஒவ்வொரு மாதமும் இருமுறை ஏகாதசியோடு தொடர்ந்து வருகிற துவாதசி உணவும் நம்முடைய கண்ணொளியைக் காத்து உடல் நலத்தைப் பேணி வருகின்றன.