அந்த டைரக்டர் நல்லா மாமா வேலை பார்ப்பார்! பிரபல நடிகையின் தங்கை வெளியிட்ட ஷாக் தகவல்!

ஹிந்தி திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரங்கோலி சாண்டல் ஆவார். இவர் எப்போதும் யாராவது ஒருவரை பற்றி சமூக வலைதளத்தில் குற்றம் சாடுவதையே தன்னுடைய கொள்கையாக கொண்டவர் என்றே கூறலாம்.


மகேஷ் பாட்டில் துவங்கி ஆலியா பாட், சோனி ரஸ்டன், ரந்தீப் ஹூடா, ஹிர்த்திக் ரோஷன், ரிச்சா சதா வரை அனைவரையும் சமூக வலைதளத்தில் பாரபட்சம் பாராமல் குற்றம் சாடுவதையே தன் வேலையாக கொண்டவர் என்றே கூறலாம்.  இவர் வலையில் தற்போது சிக்கினார் இயக்குனர் கரண் ஜோஹர்.   

ரங்கோலி சாண்டல் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் கரண் ஜோஹரை கண்டபடி வாட்டியுள்ளார். அந்த டீவீட்டில், "கரண் ஜோஹர் அவர் படத்தில் நடிக்கும் நடிகர்களின் சுயமரியாதைக்கு இடம் கொடுப்பதில்லை". 

மேலும் "இவரது படத்தில் நடிக்கும் நடிகைகள் எந்த  உடை அணியவேண்டும் எவரோடு படுக்க வேண்டும் என்று தீர்மானிப்பார்.  இவர் சொல்வதை தான் இவரது படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் கேட்க வேண்டும் என நினைக்கும் குணம் படைத்தவர்.  

மொத்தத்தில் இவர் செய்யும் மாமா வேலை என்பது இவரது தகுதிக்கு ஏற்புடையது கிடையாது" என்று கரணை ட்விட்டரில் கிழித்து எரிந்து உள்ளார் நடிகை ரங்கோலி சாண்டல்.