RCB அணியை மீண்டும் கதற விட்ட ராஜஸ்தான்! தொடர் தோல்வியால் பதறும் கோலி!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது.


முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட்ட  20 ஓவர்களில் 158 ரன்களை எடுத்தது.இந்த போட்டியிலும் விராட் கோஹ்லி, டி  வில்லியர்ஸ், ஹெட்மயேர் ஆகியோர் பெரிதாக ரன்களை சேர்க்கவில்லை.கோஹ்லி 23 ரன்களுக்கும் , டி வில்லியர்ஸ் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஹெட்மயேர் 1 ரன்  மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடக்க வீரராக களமிறங்கிய பார்திவ் படேல் மட்டும் பொறுப்பாக விளையாடிய ரன்களை சேர்த்தார். இவர் அந்த அணியின் ஸ்டோனிஸ் வுடன் இனைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பார்திவ் படேல் 67 ரன்களுக்கு அவுட் ஆனார். ஸ்டோனிஸ் அவுட் ஆகாமல் 31 ரன்களை எடுத்தார். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 158 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஷ்ரேயஸ் கோபால் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். 

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது. அந்த அணியின் பட்லர் சிறப்பாக ஆடி 59 ரன்களை எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். ஸ்டீவ் ஸ்மித் 38 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.