உற்ற நண்பரே தன் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதை தாங்கி கொள்ள இயலாத பேருந்து ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவறான வழி சென்ற 2வது மனைவி! ஆடியோ வெளியிட்டு வாழ்வை முடித்த கணவன்! தூத்துக்குடி பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகநேரி எனுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள ராஜமன்னியபுரத்தை சேர்ந்தவர் மகேஷ். மகேஷின் வயது 43. தனியார் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராக மகேஷ் பணியாற்றி வந்தார். இவருடைய 2-வது மனைவியின் பெயர் அருணா. இத்தம்பதியினருக்கு மொத்தம் 2 குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரை பிரிந்தார்.
கடந்த சில மாதங்களாகவே கணவன் மனைவி இடையே கடுமையான தகராறுகள் ஏற்பட்டு வந்தன. இதனால் குடும்பத்தில் நிம்மதியின்றி இருவரும் தவித்து வந்தனர். இந்நிலையில், 15 நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடுமையான தகராறு காரணமாக கணவன்-மனைவி பிரிந்தனர். மகேஷ் தன்னுடைய தாயாரான புஷ்பம் என்பவருடன் இணைந்து வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் குழந்தைகளை சந்தித்து வருவதாக தன்னுடைய தாயாரிடம் கூறிவிட்டு மகேஷ் வீட்டைவிட்டுப் புறப்பட்டுள்ளார். சீனந்தோப்பு காட்டுப்பகுதிக்கு அருகே சென்ற போது, மகேஷ் தன்னுடைய உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
உடனடியாக உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது, மகேஷ் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
புஷ்பம் இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரணையை தொடங்கியவுடன், மகேஷ் வெளியிட்ட ஆடியோ பதிவாகவும் சமூக வலைதளங்களில் வைரலானது. " நானும் என்னுடைய மனைவியும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம். ஆனால் என் நண்பர் ரதண், செய்த செயல்கள் என்னை மீளாத்துயரில் தள்ளிவிட்டுள்ளது. இதனால் நான் வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்கிறேன். என் மனைவியும் ரதணும் கள்ளக்காதலில் ஈடுபட்டனர். எவ்வளவு முறை கண்டித்தும் என்னை உதாசீனப்படுத்தினர்.
ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்த போதிலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மாறாக உண்மையை உணராமல் என்னை கடுமையாக தாக்கினர். என்னுடைய நண்பர் ஆட்களை அனுப்பி என்னை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். என்னால் இதற்கு மேல் போராட இயலவில்லை. இந்த ஆடியோவை கேட்டாவது அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.
ஆடியோவை பறிமுதல் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.