அமெரிக்காவில் பெண் ஒருவர் இறந்த பிறகு காவல்துறை அதிகாரி அவருடைய மார்பகங்களை பிசைந்துள்ள சம்பவமானது பெரும் வைரலாகியுள்ளது.
உயிரிழந்த பெண் சடலத்தின் மார்பகங்களை தடவிக் கொடுத்த போலீஸ் அதிகாரி! கேட்போரை அதிர வைக்கும் சம்பவம்!
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சில நாட்களுக்கு முன்னர் பெண்ணொருவர் மர்மமான முறையில் இறந்ததாக காவல்துறையினருக்கு செய்தி வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு 2 காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக சென்றுள்ளனர். அவர்கள் அந்த பெண் இறந்ததை உறுதி செய்தனர். அவர்களில் ஒருவர் நேர் ஒரு விஷயத்திற்காக சற்று வெளியே சென்றுள்ளார். அப்போது மற்றொரு அதிகாரி தன்னுடைய உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை ஆப் செய்துவிட்டு இறந்துபோன பெண்ணின் மார்பகங்களை தடவி பார்த்துள்ளார.
இதற்குப் பிறகு அந்த அதிகாரி தன்னுடைய கேமராவை ஆன் செய்துள்ளார். அமெரிக்காவில் காவல் துறையினருக்கு வழங்கப்படும் கேமரா வானது ஆண் செய்வதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பிலிருந்தே வீடியோ எடுக்க தொடங்கிவிடும். இதனைப் புரிந்து கொள்ளமல் அந்த காவல்துறை அதிகாரி சிக்கியுள்ளார்.
காவல் துறையில் முக்கிய பொறுப்பில் வகிக்கும் நபர் கூறுகையில், "குற்றம் நிரூபிக்கப்பட்டால் நிச்சயமாக அவருக்கு தண்டனை வழங்கப்படும். அவரை காப்பாற்றுவதற்காக நாங்கள் எந்த செயலிலும் ஈடுபட மாட்டோம். பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கு ஒரு செய்தியை தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறோம். இந்த குற்றமானது நிச்சயமாக மன்னிக்க முடியாததாகும். நாங்கள் இதற்காக மனம் வருந்துகிறோம்" என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவமானது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.