செவிலியர் ஒருவர் தன்னுடைய மருத்துவரையே கொலை செய்து சாப்பிட்டிருக்கும் சம்பவமானது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களையும் சாப்பிடத் தொடங்கிய சீனர்கள்..! டாக்டரை அடித்துக் கொன்று சமைத்து தின்ற நர்ஸ்! பதற வைக்கும் சம்பவம்!

சீனா நாட்டில் யூலின் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் லி ஃபெங்பிங் என்ற செவிலியர் வசித்து வந்தார். அதே நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் சிறுவயதிலேயே சூதாட்டத்தின் மீது மோகம் கொண்டவராக திகழ்ந்தார்.
தொடர்ந்து சூதாடுவதை வழக்கமான பணியாக கருதி அதற்கு அடிமையானார். வாரங்களுக்கு முன்னர் அவரிடம் பணமில்லாத காரணத்தினால் சூதாட இயலாத நிலை ஏற்பட்டது. அப்போது அவர் தன்னுடைய மருத்துவரான லுயோ யுயான்ஜியானிடம் பணத்தை கடனாக பெற்றார்.
இதனிடையே கடன் கொடுத்த பிறகு மருத்துவர், பணத்திற்கு பதிலாக செவிலியர்கள் வாரத்திற்கு மூன்று முறை தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்து போன செவிலியர், வேறு வழி தெரியாமல் மருத்துவரை கொலை செய்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.
அதன்படி இருவரும் தனியாக இருந்த நேரத்தில் செவிலியர் மருத்துவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். மருத்துவரின் சில உடல் பாகங்களை செவிலியர் பச்சையாகவே சாப்பிட்டுள்ளார். மீதமிருந்த பாகங்களை தன்னுடைய கழிவறையில் போட்டுள்ளார்.
அதன்பின்னர் காவல்துறையினருக்கு கால் செய்து செவிலியர் சரணடைந்துள்ளார். சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செவிலியர் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும், மீதமிருந்த பாகங்களை ஸ்ட்ரெச்சரில் வைத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவமானது சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.