தி.மு.க. மூத்த நிர்வாகிகளின் கட்சிப் பதவி பறிப்பு… உதயநிதி திட்டம்

முதல் கட்டத்தில் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து மிகக்குறைந்த வாக்குகள் பெற்றுக்கொடுத்த மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தா கொடுத்து அங்கெல்லாம் புதிய ஆட்களை நியமனம் செய்துவிட்டு அதன்பிறகு அடுத்த கட்டத்தில் மற்றவர்களை நியமனம் செய்யப்போகிறார்கள். புதிய ஆட்கள் எல்லோருமே முழுக்க முழுக்க உதயநிதியின் ஆதரவாளர்கள், இளைஞர் அணி ஆட்கள் மட்டுமே தான்.


தி.மு.க.வில் இப்போது 72 மாவட்டங்கள் உள்ளன. அதாவது மூன்று அல்லது 4 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதாக இந்த மாவட்டங்கள் அமைகின்றன. இவர்களின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் இந்த எண்ணிக்கையை 117 ஆக உயர்த்தும் திட்டம் இருக்கிறது.

அதாவது இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று நியமிக்கப்போகிறார்கள்.. இதன் மூலம் பெரும்பாலான உதயநிதி ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். அதோடு மூத்த தலைவர்களின் ஆதிக்கமும் குறைந்துவிடும்.

எனவே, இதற்கான பூர்வாங்க வேலைகள் முடிந்துவிட்டன. இப்படி செயல்பட்டால் மட்டுமே 2026 தேர்தலை எளிதாக வெல்ல முடியும் என்று நினைக்கிறார்கள்.

அதன்படி முதல் கட்டத்தில் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து மிகக்குறைந்த வாக்குகள் பெற்றுக்கொடுத்த மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தா கொடுத்து அங்கெல்லாம் புதிய ஆட்களை நியமனம் செய்துவிட்டு அதன்பிறகு அடுத்த கட்டத்தில் மற்றவர்களை நியமனம் செய்யப்போகிறார்கள். புதிய ஆட்கள் எல்லோருமே முழுக்க முழுக்க உதயநிதியின் ஆதரவாளர்கள், இளைஞர் அணி ஆட்கள் மட்டுமே தான்.

இதையடுத்து 60 வயதுக்கு மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் கெளரவப் பதவி கொடுத்து ஓரங்கட்டுவதற்கான திட்டம் என்கிறார்கள்.