3 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலத்தில் 100 அடிக்கு சுரங்கம்! சுர்ஜித்தை மீட்க அடுத்த கட்ட முயற்சி! பதற்றத்தில் தமிழகம்!

நடுக்காட்டு பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் அடுத்தகட்டமாக , சிறுவன் விழுந்த இடத்திலிருந்து மூன்று மீட்டர் தூரத்தில் சுரங்கம் தோண்ட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை என்னும் இடத்தில் அமைந்துள்ள நடுக்காட்டுபட்டி என்னும் கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சுர்ஜித் இரண்டு வயது சிறுவன் எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்காக பலர் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்து வருகிறது.

இந்நிலையில் நெய்வேலி சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுவரும் மிகவும் அனுபவம் மிக்க பணியாளர்கள் , நடுக்காட்டு பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவனை காப்பாற்றுவதற்காக இன்று காலை முதல் கிணற்றின் உள்ளே விழுந்த சிறுவனை காப்பாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் . தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் பல்வேறு வகையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டு எடுக்க முயற்சி செய்து வருகின்றனர். 

இந்நிலையில் சிறுவனை மீட்டு எடுக்கும் செயலில் அடுத்த கட்டமாக , சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு இருக்கும் இடத்திலிருந்து 3 மீட்டர் தூரத்தில் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் அகலத்தில் 100 அடி ஆழம் கொண்ட  சுரங்கம் தோண்ட முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. ரிக் இயந்திரம் மூலம் இந்த சுரங்கம் தோண்டும் பணியானது செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுரங்கம் தோன்றியவுடன் அந்த சுரங்கத்தில் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரியும் 3 திறமைமிக்க வீரர்கள் அந்த சுரங்கத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . இன்னும் சற்று நேரத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கு ரேக் இயந்திரம் விரையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . சுரங்கம் தோண்டும் வேலை ஆரம்பித்த ஐந்து மணி நேரத்திற்குள் சிறுவன் மீட்கப் படுவான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது .