எதிரிகளை அழிக்கும் நரசிம்மி பூஜை! நவராத்திரி 8ம் நாள் தரிசனம்!

அஷ்டமி எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள்


நரசிம்மரின் சக்தியாக விளங்கக்கூடியவள். நரசிம்மி மனித உடலும், சிங்க முகமும் கொண்டவள்.மரை ஆசனத்தில் சிங்க வாகனத்தில் அமர்ந்து இருப்பவள். எதிரிகளை அழித்து நம்மை காத்து அருளக்கூடியவள்.

தென்னாட்டில் எட்டாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் ஆசுரி துர்க்கை. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுத்ததும் அந்த அமிர்தத்தை அசுரர்களுக்கு அளிக்காமல் தேவர்கள் மட்டும் பருகிடச் செய்ய வேண்டும் என எண்ணினார் திருமால்.

மோகினி வடிவம் தரித்து அசுரர்களை மயக்கி அந்த அமிர்த கலசத்தை தேவர்களுக்கு அளிக்கும் ஆற்றலை திருமாலுக்கு வழங்கியவள் துர்க்கை ஆவாள். இதனால் அவள் ஆசுரி துர்க்கை என்று போற்றப்படுகிறாள்.

அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : ரோஜா

அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : பன்னீர் இலை

அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : இளம்பச்சை

அன்னையின் அலங்காரம் : கருணை துர்க்கை அலங்காரம்

அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : வாசனை மலர்கள்.

கோலம் : காசு கொண்டு பத்ம கோலம் போட வேண்டும்.

நெய்வேத்தியம் : பாயசம்

குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 9 வயது

குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : பயத்தை போக்கும்.

பாட வேண்டிய ராகம் : புன்னாகவராளி

நடனம் : கும்மி

குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : முறுக்கு

பலன்கள் : மனதில் வேண்டியவற்றை அருளக்கூடியவள்.