மும்பையில் இரண்டு சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த மதப்பள்ளி ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆண் சிறுவர்கள் 2 பேர் கதற கதற கற்பழிப்பு! முஸ்லீம் மதப்பள்ளி ஆசிரியருக்கு தரமான தண்டனை!

மும்பையின் டிராம்பேயைச் சேர்ந்தவர் யாகூப் என்ற முஸ்டாக் இஸ்மாயில் சலீம் ஷேக். குரான் ஆசிரியரான இவரிடம் ஏராளமான மாணவர்கள் கற்றுக்கொள்ள வருவது வழக்கம் . இந்நிலையில் தன்னிடம் கற்பதற்கு வந்த மாணவர்கலில் ஒரு 7 வயதுச் சிறுவன் மற்றும் ஒரு 9 வயதுச் சிறுவன் மீது அந்த நபருக்கு இயற்கைக்கு மாறான விருப்பம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2017-ஆம் தேதி அந்த இரு சிறுவர்களையும் தனியான இடத்துக்கு அழைத்துச் சென்ற யாகூப் அவர்களுக்கு ஆபாசப் படங்களைக் காண்பித்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவர்களை வலுக்காட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இரு சிறுவர்களும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிய போது அவர்களது உறுப்புகளில் வலி ஏற்பட்டுத் துடித்த நிலையில் தங்களுக்கு நேர்ந்தததை விளக்கினர். இதையடுத்து சிறுவர்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த யாகூப்பை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்றுவந்த நிலையில் யாகூப்புக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கடந்த வியாழக் கிழமை நீதிபதி உத்தரவிட்டார்.