தங்கை கணவனுடன் அக்கா! அக்கா கணவனுடன் தங்கை! தகாத உறவை நேரில் பார்த்த மகன்! பிறகு அரங்கேறிய கொடூரம்!

தான் ஈடுபட்டு வந்த கள்ளக்காதல் வெளியே கசிந்துவிடும் என்பதால் பயந்த தாயொருவர் பெற்ற மகனை கொலை செய்துள்ள சம்பவமானது தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் என்னும் பகுதி அமைந்துள்ளது. முருகன் என்பவர் இந்த பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 4 வயதான ஹரிஷ் என்ற மகன் உள்ளார். இதனிடையே கணவன் மனைவி இடையே பலத்த சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்தன. 2 வருடங்கள் முன்னர் இருவரும் பரஸ்பரமாக பிரிந்து சென்றனர்.

முருகன் மறவப்பட்டியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். கீதா, தேவாரம் பகுதியை சேர்ந்த தன் நண்பரான உதயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கீதா தன் பெற்றோர் வீட்டுக்கு அருகே வசித்து வருகிறார்.

சிறுவன் ஹரிஷின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக மாறியது. தாய் மற்றும் தந்தையின் வீடு அருகாமையில் இருந்ததால் இருவரின் வீட்டிலும் வசித்து வந்தான். கீதாவின் தந்தை மற்றும் தங்கை ராஜேஸ்வரியிடம் ஹரிஷ் வளர்ந்து வந்தார்.

நேற்று இரவு பொதுவெளியில் விளையாடிக்கொண்டிருந்த ஹரிஷ் திடீரென்று மாயமானார். ராஜேஸ்வரி மற்றும் உறவினர்கள் ஹரிஷை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விரக்தியடைந்த ராஜேஸ்வரி, அப்பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

காவல்துறையினர் ஹரிஷை பல்வேறு இடங்களில் தேடினர். இறுதியாக கோம்பை பகுதியில் இருந்த தண்டவாளத்தில் முகம் முழுவதும் கற்களால் அடித்து விட்டு சிறுவன் ஒருவன் இறந்து கிடந்ததாக தகவல் கிடைத்தது. ராஜேஸ்வரி அழைக்கிறேன் அடையாளத்தை காண வைத்த போது அது ஹரிஷ் தான் என்று அடையாளம் கண்டுள்ளார். 

சிறுவனின் உடலை அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது தீமையையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்த போது திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. 

கீதாவின் தங்கையான ராஜேஸ்வரி அப்பகுதி ஆட்டோ டிரைவரான கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு கார்த்திக் கீதாவின் வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது. மேலும் கீதாவின் தங்கை புவனேஸ்வரியும், கீதாவின் 2-வது கணவரான உதயகுமார் கள்ளக்காதலில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.

கீதா கார்த்திக்குடன் உல்லாசமாக இருப்பதையும், ராஜேஸ்வரி உதயகுமாருடன் உல்லாசமாக இருப்பதையும் ஹரிஷ் பார்த்துள்ளான். விஷயம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக கீதாவும் கார்த்திக்கும் முடிவெடுத்து ஹரிஷை கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். காவல் துறையினர் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.