3.30 மணி பிப்ரவரி 26 அன்று இந்திய மிராஜ் விமானங்களின் குழு ஒன்று இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்ததாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானுக்குள் இந்திய விமானப்படை குண்டு மழை! 300 தீவிரவாதிகள் பலி!

மிராஜ் விமானங்கள் பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தன !! விமானப்படை வட்டாரம் தகவல் !
இதற்கு முன்னதாக பாக் டிஐி ஐஎஸ்பிஆர் கூறிய தகவலில் இந்திய விமானப்படை விமானங்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் எல்லையை கடந்ததாக கூறினார்.
பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளர் அசிப் கபூர் கூறியுள்ள செய்தியில் முசாபிராபாத் பகுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் ஊடுருவியதாக கூறியுள்ளார்.
அதன்பின் பாகிஸ்தான் தனது விமானங்களை அனுப்பியதால் இந்திய விமானங்கள் திரும்பிவிட்டதாக கூறியுள்ளார்.
இந்திய விமானம் தனது payload ஐ வீசியதாகவும் அது பாலகோட் செக்டாரில் வீழ்ந்ததாகவும் தகவல் கூறியுள்ளார்.காயமோ சேதமோ இல்லை எனவும் கூறியிருந்தார். ஆனால் இந்திய விமானப்படை வட்டாரங்கள் தாக்கி அழித்ததாக கூறியுள்ளன
ஆனால் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 1000 கிலோ வெடிகுண்டு வீசப்பட்டதாகவும் இதில் 300 தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.