பியூட்டி பார்லர் ஷோபனா கொலையில் மர்மம் விலகியது..! கணவனுக்கு அல்வா கொடுத்தவருக்கு கள்ளக் காதலனால் ஏற்பட்ட பயங்கரம்! திருச்செங்கோடு திகுதிகு!

கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறினால் அழகு நிலைய ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு இயங்கி வரும் பெண்கள் அழகு நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஷோபனா என்ற இளம்பெண் பணியாற்றி வந்தார். ஷோபனா இறையமங்கலம் பகுதியை சேர்ந்தவராவார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவருடைய கணவரின் பெயர் செந்தில். 

வழக்கமாக ஷோபனா திருச்செங்கோட்டில் இருந்து இறையமங்களத்திற்கு பேருந்தில் வருவார். நேற்று முன்தினம் இரவு கடைசி பேருந்தை தவற விட்டதாக செந்திலை தொடர்புகொண்டு கூறியுள்ளார். அப்போது தெரிந்த நபர் ஒருவருடன் காரில் வருவதாகவும் ஷோபனா கூறியுள்ளார்.

ஆனால் இரவு 9 மணி ஆகியும், சோபனா வீட்டிற்கு வராததை தொடர்ந்து அவருடைய உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடி அலைந்தனர். எங்கும் சோபனா கிடைக்காததால் அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நள்ளிரவு முழுவதும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். ஆனால் காவல்துறையினரால் கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்நிலையில் நேற்று காலை புள்ளிபாளையம் பகுதிக்கு அருகேயுள்ள குட்டையொன்றில் ஷோபனாவின் சடலத்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். சோபனா மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்ட அவருடைய உறவினர்கள் அப்பகுதியில் கதறி அழுதனர். அருகிலிருந்த காட்டுப்பகுதியில் சோபனா தன்னுடைய மகனுக்காக ஆசை ஆசையாக வாங்கி வந்த புத்தாடைகள் சிதறி கிடந்தன.

இந்த சம்பவமானது இறையமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக தனிப்படை அமைத்தனர். ஷோபனாவின் கழுத்திலிருந்த நகைகள் ஏதும் திருடப்படாததால் அவர் நகைக்காக கொலை செய்யப்படவில்லை என்பதை காவல்துறையினர் ஊர்ஜிதப்படுத்தினர்‌. மேலும் சோபனாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகள் ஆராய்ந்தபோது ஷோபனா யாருடனும் இருசக்கர வாகனத்தில் வருவதை காவல்துறையினர் கண்டறிந்தனர். அந்த கேமரா பதிவை வைத்துக்கொண்டு ஆராய்ந்த போது, அழகு நிலையத்திற்கு மேல் மாடியில் இருக்கும் போர்வெல் உரிமையாளரான சுரேஷ்குமார் சோபனா உடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்‌.

உடனடியாக காவல்துறையினர் சுரேஷ்குமார் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுரேஷ்குமார் பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டார். அதாவது, இருவருக்கும் கடந்த 6 மாதகாலமாக பழக்கம் இருந்துள்ளது. மேலும் பலமுறை இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்துள்ளனர். இதனுடைய சுரேஷ்குமார் இதே போன்று வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்தது ஷோபனா அறிந்துள்ளார். 19-ஆம் தேதியன்று ஷோபனாவை சுரேஷ்குமார் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இதுகுறித்து ஷோபனா அவரிடம் விசாரித்தபோது, சுரேஷ்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு ஷோபனாவை தாக்க முயன்றுள்ளார். ஆத்திரமடைந்த ஷோபனா சுரேஷ்குமாரின் கழுத்தை நெறித்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் ஷோபனா அவனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் ஷோபனாவை முதலில் மூட்டை கட்டி அப்பகுதியில் உள்ள குப்பையில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சுரேஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.