நடுரோடு என்றும் பாராமல் மனைவியை விரட்டி விரட்டி கணவன் அரங்கேற்றிய கொடூரம்! கன்னியாகுமரி பரபரப்பு!

மதுபோதையில் மனைவியை கணவன் கல்லால் தாக்கி உள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரியை சேர்ந்தவர் மரிய டெலஸ். இவருடைய வயது 42. இவர் கன்னியாகுமரி கடற்கரையில் மணி, சீப்பு ஆகிய பொருட்களை விற்று வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் அருள் சுனிதா. அவருடைய வயது 37. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

மரிய டெலஸ் மது போதைக்கு அடிமையானவர். தினமும் மது அருந்திவிட்டு தன் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் இருவருக்கு இடையே விரிசல் பெரிதாகும்போது உறவினர்கள் இருவரையும் சேர்த்து வைப்பர். 

இதனிடையே சம்பவத்தன்று, காலை 10 மணியளவில் மரிய டெலஸ் அதிகளவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்தவுடன் வழக்கம் போல தன் மனைவியான அருள் சுனிதாவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மரிய டெலஸ் மனைவியை அடித்து துரத்தியுள்ளார்.

அருள் சுனிதா நடுரோட்டுக்கு சென்று ஓடிக்கொண்டிருந்தார். அப்போது கீழே இருந்த கல்லை எடுத்து மரிய டெலஸ் அருள் சுனிதாவை அடித்துள்ளார். இதனால் நிலை தடுமாறி ரத்த வெள்ளத்தில் அருள் சுனிதா கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு எடுத்து அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் நிகழ்ந்தவற்றை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டெல்லசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.