வங்கிப் பணிக்காக 11 பேரிடம் படுக்கையை பகிர்ந்த பெண்! கடைசியில் நேர்ந்த விபரீதம்!

வேலை வாங்கி தருவதாக கூறி திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதனை ஆபாச வீடியோவாக கயவன் ஒருவன் வெளியிட்ட சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேனி மாவட்டத்தில்  சங்கராபுரம் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வசந்த குமார் என்பவரை காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தைக்காக ஆசைப்பட்டு மூன்றாவது முறையாக விஜயலட்சுமி கர்ப்பமானார்.

துரதிஷ்டவசமாக நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது அவரின் கரு கலைந்தது. மருத்துவ செலவிற்காக பல வட்டிக்கு இவர் கடன் வாங்கியுள்ளார். கடனை அடைக்க வேறு வழி இல்லாததால் வசந்தகுமார் கேரள மாநிலத்தில் எலக்ட்ரீசியனாக பணிக்கு சென்றார். விஜயலட்சுமி வங்கியில் வேலை பார்ப்பதால் வங்கி குடியிருப்பில் தன் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

விஜயலட்சுமி பணிபுரியும் வங்கியில் சிவகார்த்திகேயன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். விஜயலட்சுமியின் இயலாத சூழ்நிலையை அறிந்த சிவகார்த்திகேயன் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார். அதாவது விஜயலட்சுமிக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டியுள்ளார். திடீரென்று ஒருநாள் மேலதிகாரியை வேலை நிமித்தமாக சந்திக்க வேண்டும் என்று விஜயலட்சுமியை சொகுசு பங்களா ஒன்று இருக்கு சிவகார்த்திகேயன் அழைத்துள்ளார்.

அங்கு விஜயலட்சுமிக்கு ஆசையை காட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். விஜயலட்சுமிக்கு தெரியாதவாறு உல்லாசமாக இருந்ததை படம் பிடித்துள்ளார். தன் நண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ளாவிட்டால் கணவனுக்கு வீடியோவை அனுப்பி விடுவதாக சிவகார்த்திகேயன் மிரட்டியுள்ளார். மிரட்டலுக்கு பயந்து விஜயலட்சுமி 10 பேருடன் உடல் உறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர் போஸ் என்ற உறவினரிடம் தன் நிலையைக் கூறி உதவி கேட்க சென்றார்.

ஆனால் அவரும் இதே போன்று பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வெளியிடுவதாகக் கூறி மிரட்டி வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கணவனிடம் இதை பற்றி தெரிவித்தார் விஜயலட்சுமி. இருவரும் தேனி மாவட்டத்தில் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் அதற்கு எந்தவித மதிப்பும் இன்றி காவல்துறையினர் செயல்பட்டு வந்தனர்.

விரக்தியடைந்த வசந்தகுமார் தன்னுடைய கணினிபொறியாளர் பணியின் மூலம் தன் மனைவிக்கு தொந்தரவு கொடுத்தவர்களை கண்டுபிடித்துள்ளார். அனைத்து ஆதாரங்களையும் ஒன்று திரட்டி 8- ஆம் தேதியன்று போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ளார். காவல்துறை கண்காணிப்பாளர் வழக்கினை பதிவுசெய்து சிறப்புக்குழு ஒன்றை அமைத்தார்.

அந்த குழுவானது 2 பேரை பிடித்து, மாயமாக உள்ள 10 பேருக்கு வலை வீசி வருகிறது. இந்த செய்தியானது தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.