உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாய்வு என்பது உண்மையா ??

அரிசி, கோதுமை, சோளத்துக்கு அடுத்தபடியாக அதிகமாக விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கின் தாயகம் பெரு நாடு. உருளைக்கிழங்கு உற்பத்தியில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.


சாப்­பிட்­டதும் உட­­டி­யாக உட­லுக்குச் சக்தி தரக்­கூ­டிய முக்­கி­­மான உணவுப் பொருள் உருளைக் கிழங்கு. அதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கான முக்கிய உணவுப் பொருளாக இருக்கிறது.

·         உருளைக் கிழங்கில் கார்போஹைடிரேட், மாவுப் பொருள், சர்க்கரை போன்றவை நிரம்பியிருப்பதால், உருளைக் கிழங்கு சாப்பிட்டாலே போதிய சத்துக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

·         பாலைவிட அதிகமாக புரதச்சத்து உருளைக்கிழங்கில் இருப்பதால், குழந்தைகளுக்கு இதனை தினமும் கொடுத்துவந்தால் பசி எடுக்காமல் நிம்மதியான தூக்கம் வரும்.

·         சருமத்தில் உள்ள வறட்சியைப் போக்குவதற்கும் பளபளப்பை கொண்டுவருவதற்கும் உருளைக்கிழங்கு உதவுகிறது.

·         உருளைக் கிழங்கு சாப்பிட்டால் வாயு அதிகரிக்கும் என்பது உண்மை அல்ல. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே பிரச்னை உண்டாகும்.

உருளைக் கிழங்கினை வேக­வைத்து, சுட்டு, பொரித்து, மசித்து நீண்ட நாட்­­ளுக்கு வைத்து சாப்பிடமுடியும் என்பதும் இதன் தனிச்சிறப்பு ஆகும்.