பிறக்கும் குழந்தைக்கு சில நேரம் இதயத்தில் ஓட்டை இருப்பதுண்டு. ஆனால், மருத்துவரோ இப்போது அறுவை சிகிச்சை தேவையில்லை என்று சொல்லிவிடுவார். மேலும் அந்த ஓட்டை தானாகவே அடைபட்டுவிடும் என்றும் சொல்வதுண்டு, இது உண்மைதானா..?
குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?

உண்மைதான் இதயத்தின் மேல் அறைகளுக்கு இடையே சுவரில் துளை, ஏட்ரியம் எனப்படும் இதய மேல் அறைகளுக்கு இடையில் உள்ள சுவரில் காணப்படும் துளை ஏ.எஸ்.டி என்று அழைக்கப்படும்.
பிறந்தவுடன் குழந்தைக்கு இந்த துளை கண்டறியப்பட்டால் உடனடி சிகிச்சை அவசியமில்லை. ஏனென்றால் இது 40 வயதுக்கு மேல்தான் தொந்தரவு தரும். அந்த நேரத்தில் இதைக் குணப்படுத்த எளிய அறுவை சிகிச்சை போதும்.
அதேபோன்று இந்தத் துளையானது வலது, இடது வென்டரிக்கிள் எனப்படும் கீழ் அறைகளுக்கு இடையே காணப்படும் பிரச்னை வி.எஸ்.டி என்று அழைக்கப்படும். பெரும்பாலானவர்களுக்கு 12 வயதில் இந்த ஓட்டை தானாகவே மூடிக்கொள்ளும்.
பொதுவாகவே இன்று இதயத்தில் எப்படிப்பட்ட குறை இருப்பினும் கவலைப்படத் தேவை இல்லை. நவீன மருத்துவத்தின் மூலம் அனைத்துக் குறைகளையும் எளிதில் நீக்கிவிட முடியும்.