இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
வான்கடேவில் சிக்சர் மழை! மேற்கிந்திய தீவுகளை தெறிக்க விட்டு தொடரை வென்ற இந்திய அணி!

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகிட் ஷர்மா மற்றும் லோகேஷ் ராகுல தொடக்கம் முதலே மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 34 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.
லோகேஷ் ராகுல் அபாரமாக விளையாடி 56 பந்துகளில் 91 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் விராட்கோலி மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். சிறப்பாக வளரக்கூடிய 29 பந்துகளில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 240 ரன்களை குவித்தது.
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்க முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியின் கேப்டன் பொல்லார்டு அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் சார்பாக தீபக் சஹர் மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனால் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை விழ்த்தி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.