உலகம் முழுவதும் வைரலாகும் தமிழ்நாட்டு குழந்தைகளின் ஆபாச படம்! ஐபிஎஸ் அதிகாரி வெளியிட்ட பகீர் தகவல்!

சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபாச படங்களை அதிகம் பகிர்ந்ததாக ஒருவர் கைதான நிலையில், பெரும்பாலான ஆபாச படங்களில் தமிழகத்தை சேர்ந்த குழந்தைகள் இருப்பதாக காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.


இந்த தகவலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ரவி வெளியிட்டுள்ளார். 

பாலியல் தொடர்பான ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் குற்றவாளிகளாக கருதப்படமாட்டார்கள் என தெரிவித்த ரவி, ஆபாச படங்களை செல்போனில் சேமித்து வைப்பவர்கள், மற்றவர்களுக்கு பகிர்பவர்கள்தான் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

அதே சமயம் தற்போது வரை பறிமுதல் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்களில் அதிகம் தமிழகத்தை சேர்ந்த பெண் குழந்தைகள்தான் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேஸ்புக்கில் போலி பக்கங்களை வைத்துக்கொண்டு குற்றவாளிகள் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். மேலும் இந்த நடவடிக்கை தொடரும் என தெரிவித்த ரவி, படங்களை பார்த்தவர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், பகிர்பவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை பாயும் என தெரிவித்தார். அதே சமயம், தங்களுக்கு வந்த வீடியோக்கள் ஆபாச படம் என தெரியாமல் பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சிரமம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் ஐபிஎஸ் அதிகாரி ரவி.