ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை டெமி மூர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி மனம் திறந்துள்ளார்.
15 வயதில் ரேப்! 3 கணவன்களை விவாகரத்து செய்தேன்! கருச்சிதைவும் ஏற்பட்டது! பிரபல நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்!

ஹாலிவுட் சினிமாவில் கடந்த 1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை டெமி மூர். இவர் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த மிகவும் கோரமான தருணங்களை முதன்முறையாக தன் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். 56 வயதாகும் நடிகை டெமி மூர் " Inside out" எனும் புத்தகத்தை தற்போது வெளியிட்டுள்ளார் அந்த புத்தகத்தின் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை பற்றியும் விவரித்துள்ளார்.
அந்தப் புத்தகத்தில் பல தரக்கூடிய அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை பற்றி விவரித்துள்ளார் 15 வயதாக இருக்கும் பொழுது தன்னை ஒருவர் பலாத்காரம் செய்ததாகவும் அதனால் பெரிதும் வேதனைப் பட்டதாகவும் அதில் எழுதியுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் அழுத்தத்துக்கு உள்ளான தாகவும் கூறியிருக்கிறார்.
நடிகை டெமி மூர் நடிக்க வருவதற்கு முன்பாக மாடலாக வலம் வந்தவர் . இவர் நடிக்க வந்த பின்பு சினிமா திரை உலகில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திரமாக மாறினார்.
இவர் முதலாவதாக பிரடி மூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
மீண்டும் இரண்டாவதாக பிரபல நடிகரான புரூஸ் வில்லியம்சை திருமணம் செய்து கொண்டார். எவருடனும் வாழ்க்கை பயணம் சரியாக அமையாத காரணத்தால் இருவரும் பிரிந்துவிட்டனர். இதனையடுத்து நடிகை டெமி மூர் தன்னைவிட பதினைந்து வயது குறைவாக இருந்த நடிகர் ஆஸ்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப்பின் கர்ப்பமானார். 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது டெமி மூருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு உள்ளது இந்த கருச்சிதைவு ஏற்படுவதற்கு பின்பு இவரது வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது. காரணம் இந்த குழந்தையின் பிரிவை தாங்க இயலாமல் தினந்தோறும் தூக்க மாத்திரைகளையும் மதுவுக்கு அடிமையாக வாழ்ந்து வந்துள்ளார்
இதனையடுத்து தன்னுடைய மூன்றாவது கணவருடனும் மனக்கசப்பு ஏற்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ளார் நடிகை டெமி மூர். தற்போது அவர் தன் மகள் ஒருவருடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.