காவல் துறைக்கு முழு சுதந்திரமும் மதிப்பும் அ.தி.மு.க. ஆட்சியில்தான் கிடைக்கும். அதனை உறுதி செய்யும் வகையில் காவல் துறைக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
காவல் துறைக்கு அள்ளிக்கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி... 50 காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி, முழுநேர மருத்துவமனை

இன்று அவர், தமிழகத்தில் விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கினார். அந்தவகையில் விபத்து மற்றும் உடல்நலக் குறைவால் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குவதற்கான அரசாணை வெளியிட்டார்.
மேலும் காவல் மருத்துவமனையை தரம் உயத்தி அறிவித்தார். அவரது அறிவிப்பின்படி, தமிழ்நாடு காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உடல்நலனை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாக தொடர்ந்து விளங்கி வருகிறது.
காவலர் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு அம்மாவின் அரசு, காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்குகான உயரிய மருத்துவ தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு அனைத்து வகையான உயரிய சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை அளித்திட ஏதுவாக, சென்னையில் உள்ள காவல் மருத்துவமனையை, அனைத்து பிரதான மருத்துவ துறைகளையும் உள்ளடக்கிய முழுத்திறன் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று (5.2.2021) என்னுடைய பதிலுரையில் அறிவித்தேன்.
தற்போது, கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் ஆவடி மாநகரங்களில் காவல்துறையினருக்காக மருத்துவமனைகள், உள்நோயாளிகளுக்கான வசதியுடன் செயல்பட்டு வருகின்றன. இது தவிர, சென்னை புனித தோமையர் மலை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் புறநோயாளிகளுக்கான சிகிச்சை வசதிகளுடன் காவல்துறையினருக்கான பகல் நேர மருத்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேற்கூறிய மருத்துவமனைகள் மற்றும் மருத்தகங்களை, 36 படுக்கை வசதிகள், எக்ஸ்ரே, ஈ.சி.ஜி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி.ஸ்கேன் போன்ற நவீன உபகரணங்களுடனும், முழுமையான மருத்துவ ஆய்வகங்களுடனும், சிறிய சிகிச்சைகளுக்கான அறுவை அரங்குகளுடனும் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய முழு நேர காவல் மருத்துவமனைகளாக தரம் உயர்த்த நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.