இளைஞர் ஒருவர் பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தததை அறிந்த பொதுமக்கள் அவர்களை கட்டிவைத்து அடித்தது மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலனுடன் உல்லாசமாக இருந்த மருமகள்! நேரில் பார்த்து மாமனார் செய்த அதிர வைக்கும் சம்பவம்!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பிந்த் எனும் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு திருமணமான இளைஞர் ஒருவர் தன் வீட்டிற்கு அருகேயுள்ள திருமணமான பெண்ணுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். காலப்போக்கில் நெருக்கமானது கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் வீட்டில் யாருமில்லாத நேரங்களில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். பெரும்பாலும் இளைஞர் பெண் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனையறிந்த அந்த பெண்ணின் மாமனார் ஊர் பஞ்சாயத்தை கூட்டி இருவரது கேவலமான உறவை அம்பலப்படுத்தினார். உடனடியாக பஞ்சாயத்து நிறைவேறியவுடன் இருவரையும் மரத்தில் கட்டி பொதுமக்கள் அடித்து துவைத்துள்ளனர்.
இந்த சம்பவமானது மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.